தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
பொதுவாக முன்னணியில் இருக்கும் இரண்டு கதாநாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது அபூர்வமான ஒரு விஷயம். அப்படியே நடித்தாலும் ஒருவர் பிளாஷ்பேக்கில் மட்டும் வந்து செல்வது போன்றுதான் கதை அமைந்து இருக்கும். ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா இருவரும் இணைந்து நடித்து இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.
அதேசமயம் கதைப்படி இருவரும் பாசமான சகோதரிகளாக நடித்திருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலுக்கேற்றபடி இருவருமே விஜய்சேதுபதியை விரும்பும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் படத்தில் இவர்கள் இருவரும் அதிக காட்சிகளில் இணைந்து வரும் விதமாகத்தான் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்திற்காக இவர்கள் இருவருமே ஒரு பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்யும் வீடியோ ஒன்று கூட சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.