ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
"உன்னாலே உன்னாலே படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சாக்லேட் பாய் வினய். பெங்களூரில் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்த இவரை, கோடம்பாக்கத்துக்கு கூட்டி வந்தவர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா. "ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, இருவர் உள்ளம் மற்றும் பெயரிடப் படாத இரண்டு, புதிய படங்களில் நடிக்கிறார். "ஏன் இந்த இடைவெளி என, அவரிடம் கேட்டபோது, "உன்னாலே உன்னாலே படத்திற்கு பின், எனக்கு வந்தது எல்லாமே லவ் ஸ்டோரி தான். ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதை தவிர்த்தேன். என்னை பொறுத்தவரை வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே, ஆசைப்படுகிறேன். அது தான், சவாலாக இருக்கும். வித்தியாசமான வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. விரைவில், பெங்களூரில் இருந்து, சென்னைக்கு குடியேறப் போகிறேன். இனி நிறைய நல்ல படங்கள் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் கூறுகிறார், வினய்.