எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை : 'தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க உழைத்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திரை உலகை காக்கும் வகையில் திரையரங்குகளை திறந்து ஐம்பது சதவிகிதம் இருக்கைகளுடன் இயங்குவதர்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகமெங்கும் உள்ள திரை உலக ரசிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு திரையரங்கை நோக்கி வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக முதல்வர் அவர்களுக்கு தமிழ் திரை உலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வாழ வைக்க வேண்டுமாய் இருகரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்'.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.