இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடனான தனது உரையாடலின்போது தனது வாழ்க்கையில் தான் புதிய தளத்திற்குள் அடியெடுத்து வைக்கப்போவதாக கூறிவந்தார். அந்தவகையில் ஒரு தொழிலதிபராக மாறி தற்போது புதிய முகம் காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஆம்.. சருமத்தை பாதுகாக்க உதவும் அழகு சாதனா பொருட்களை தயாரிக்கும் பூமித்ரா என்கிற நிறுவனத்தை துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த அழகு சாதன பொருட்கள் எல்லாமே ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்படுகின்றனவாம். இதை விளம்பரப்படுத்துவதற்கும் ஆன்லைனில் விற்பனை செய்வதற்கும் என்றே தனியாக இணையதளம் ஒன்றையும் துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.