ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். தற்போது அதிக படங்களுக்கு இசை அமைத்து வருகிறவர் அவர்தான். பின்னணி இசைக்கு முக்கியமான இசை அமைப்பாளராக கருதப்படுகிறார்.
அவர் இசை அமைத்த பல பாடல்களை ரசிகர்கள் அனிருத் இசை அமைத்த பாடல் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சாம் சி.எஸ் வருத்தமுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது இசையில் ஹிட்டான பல பாடல்களை அனிருத் பாடி இருக்கிறார். அந்த பாடல்களுக்கு இசை அமைத்தது நான்தான் என்பது தெரியாமல் அவர் இசை அமைத்ததாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அனிருத்துக்கு பெரிய ரசிகர் வட்டம் இருப்பதால் அந்த பாடல்கள் சுலபமான ரசிகர்களை சென்று சேர்ந்து விடுகிறது. அதனால் அவர்கள் அப்படி நினைப்பதற்கும் காரணமாகி விடுகிறது. இப்போது அந்த நிலை மாறி வருகிறது.
அதேபோல எனது பல பாடல்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்துகிறார்கள், இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அது என் இசையில் உருவானது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கும் இப்போது தெரிய வருகிறது. எந்த பாடலாக இருந்தாலும் யார் இசை அமைத்தது, யார் பாடியது என்பதை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார்.