சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிவித்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக அறியப்பட்ட செல்வராகவன் இப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் அருண் மாதேஸ்வரன் ஏற்கெனவே 'ராக்கி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தரமணி படத்தில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'சாணிக் காயிதம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ஏதோ ஒரு 'சம்பவம்' செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கொரோனா அலைகளைத் தாக்குப் பிடித்து தற்போது படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள். “சாணிக் காயிதம்' படப்பிடிப்பு முடிந்தது. என்ன ஒரு அற்புதமான பயணம், நிறைய கற்றுக் கொண்டேன், நட்சத்திரங்களுக்கும், குழுவினருக்கும் நன்றி,” என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.




