முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிவித்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக அறியப்பட்ட செல்வராகவன் இப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் அருண் மாதேஸ்வரன் ஏற்கெனவே 'ராக்கி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தரமணி படத்தில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'சாணிக் காயிதம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ஏதோ ஒரு 'சம்பவம்' செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கொரோனா அலைகளைத் தாக்குப் பிடித்து தற்போது படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள். “சாணிக் காயிதம்' படப்பிடிப்பு முடிந்தது. என்ன ஒரு அற்புதமான பயணம், நிறைய கற்றுக் கொண்டேன், நட்சத்திரங்களுக்கும், குழுவினருக்கும் நன்றி,” என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.




