வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் | பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? |
சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலிங்கில் நுழைந்து 'பாணா காத்தாடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி பிரபலமாகும் முன்பே 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் அங்கு அறிமுகமாகி பிரபலமானார்.
தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக, அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தன்னுடன் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து அவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்தியாவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமும், கடற்கரை நகரமுமான கோவாவில் பெரிய ரிசார்ட்டில் 'டெஸ்டினேஷன் வெட்டிங்' ஆக நடந்தது. அதன் பின் அளித்த பேட்டியில் கோவாவில் வசிக்க வேண்டும் என்பது தனது ஆசை என சமந்தா கூறியிருந்தார்.
அதற்காக கோவாவில் ஒரு இடத்தை வாங்க வேண்டுமென அவரும், கணவர் நாக சைதன்யாவும் முயற்சித்தார்கள். தற்போது அங்கு கடற்கரையை ஒட்டி ஒரு இடத்தை வாங்கிவிட்டார்களாம். அங்கு பார்ம் ஹவுஸ் கட்டுவதற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்.
தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் சமந்தா, கோவாவிற்கு தன் இருப்பிடத்தை மாற்றலாம் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.