சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் அந்த தலைப்பை நீக்கிவிட்டு வெந்து தணிந்தது காடு என்று தலைப்பு வைத்து சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இது எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஒன்றை தழுவி உருவாகிறது.
இந்த படத்துக்காக சிம்பு 15 கிலோ வரை எடை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள், நடிகைகளின் விபரம் விரைவில் வெளியிடப்படுகிறது. இதன் படப்படிப்பும் திருச்செந்தூரில் தொடங்கி விட்டது. இந்த நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி உள்ளது. இது இலங்கை தமிழர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எழுத்தாளர் கவிதா பாரதி கூறியிருப்பதாவது: இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். மதிசுதா என்பவர் ஈழத்து திரைக்கலைஞன். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தம்பி, வேறு எந்தத் தொழிலையும் பாராமல் திரைத்துறைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இளைஞன். உலகளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
எனினும் ஈழத்திரையுலகம் வணிக ரீதியாக வருமானம் தருமளவுக்கு விரிந்து பெருகவில்லை. ஒருபுறம் தனது சொந்த வாழ்க்கைக்கும், மறுபுறம் படத்தயாரிப்புச் செலவுகளுக்கும் சிரமமான சூழலிலேயே தம்பி மதிசுதா செயல்படுகிறான் இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சிறு அளவில் நிதிதிரட்டிப் படமெடுத்து அதனை வெளியிடப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அந்த படத்தின் பெயர், வெந்து தணிந்தது காடு. இந்நிலையில் இதே தலைப்பில் தங்கள் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் ஓடிடி தளத்தில் படத்தை விற்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது. மதிசுதாவின் படம் குறித்த தகவல் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். யானையின் காலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழந்துவிடக்கூடாது.
இவ்வாறு கவிதா பாரதி கூறியிருக்கிறார்.