மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? |
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரனி, சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவால் தடைபட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை பாலம் பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நாயகி பிரியங்கா அருள் மோகன், சூரி, ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்பட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு பற்றி கேள்விப்பட்ட அக்கம் பக்கத்து ஊர் பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் வேடிக்கை பார்க்க திரண்டு விட்டனர். அவர்கள் யாரும் முககவசம்கூட அணிந்திருக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டனர். பின்னர் போலீஸ் உதவியுடன் அங்கு கூடிய மக்களை கலைந்து போகச் செய்தனர். படப்பிடிப்புக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா. படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.