ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அந்தக் கால நடிகைகள் நடித்து சம்பாதித்த பணத்தை சொந்த படம் எடுத்து, பிற்காலத்தில் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இந்த காலத்து நடிகைகள் ரொம்பவே விபரமானவர்கள், ரியல் எஸ்டேட், நகை கடை, துணி கடை, ஷேர் மார்க்கெட் என தங்கள் பணத்தை பத்திரமாக முதலீடு செய்கிறார்கள். சமீபத்தில்கூட நயன்தாரா சாய்வாலா என்ற நிறுவனத்தில் முதலீடு செய்த தகவல்கள் வெளியானது.
அந்த வரிசையில் நடிகை ஜனனி தனது சகோதரியுடன் இணைந்து ஆடை விற்பனை செய்யும் வியாபாரத்தில் இறங்கி உள்ளார். அவன் இவன் , தெகிடி. அதே கண்கள், பலூன், பாகன், விதி மதி உல்டா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள வேஷம், கசட தபற அந்தாலஜி, பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் உள்ளிட்ட படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு அவருடைய தங்கையுடன் சேர்ந்து புதிய வியாபாரம் ஒன்றை துவங்கியுள்ளார். தி ஹசல் அவென்யூ என்ற இணையத்தளம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, மாடர்ன் உடைகளை விற்பனை செய்கிறார். அவர் விற்கும் உடைகளுக்கு அவரே விளம்பர மாடல் ஆகவும் உள்ளார்.
நடிகர், நடிகையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் ஜனனி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களாம். சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பெயரை அகற்றியதால் பாராட்டப்பட்டவர் ஜனனி என்பது குறிப்பிடத்தக்கது.