என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அந்தக் கால நடிகைகள் நடித்து சம்பாதித்த பணத்தை சொந்த படம் எடுத்து, பிற்காலத்தில் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இந்த காலத்து நடிகைகள் ரொம்பவே விபரமானவர்கள், ரியல் எஸ்டேட், நகை கடை, துணி கடை, ஷேர் மார்க்கெட் என தங்கள் பணத்தை பத்திரமாக முதலீடு செய்கிறார்கள். சமீபத்தில்கூட நயன்தாரா சாய்வாலா என்ற நிறுவனத்தில் முதலீடு செய்த தகவல்கள் வெளியானது.
அந்த வரிசையில் நடிகை ஜனனி தனது சகோதரியுடன் இணைந்து ஆடை விற்பனை செய்யும் வியாபாரத்தில் இறங்கி உள்ளார். அவன் இவன் , தெகிடி. அதே கண்கள், பலூன், பாகன், விதி மதி உல்டா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள வேஷம், கசட தபற அந்தாலஜி, பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் உள்ளிட்ட படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு அவருடைய தங்கையுடன் சேர்ந்து புதிய வியாபாரம் ஒன்றை துவங்கியுள்ளார். தி ஹசல் அவென்யூ என்ற இணையத்தளம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, மாடர்ன் உடைகளை விற்பனை செய்கிறார். அவர் விற்கும் உடைகளுக்கு அவரே விளம்பர மாடல் ஆகவும் உள்ளார்.
நடிகர், நடிகையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் ஜனனி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களாம். சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பெயரை அகற்றியதால் பாராட்டப்பட்டவர் ஜனனி என்பது குறிப்பிடத்தக்கது.