ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

அந்தக் கால நடிகைகள் நடித்து சம்பாதித்த பணத்தை சொந்த படம் எடுத்து, பிற்காலத்தில் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இந்த காலத்து நடிகைகள் ரொம்பவே விபரமானவர்கள், ரியல் எஸ்டேட், நகை கடை, துணி கடை, ஷேர் மார்க்கெட் என தங்கள் பணத்தை பத்திரமாக முதலீடு செய்கிறார்கள். சமீபத்தில்கூட நயன்தாரா சாய்வாலா என்ற நிறுவனத்தில் முதலீடு செய்த தகவல்கள் வெளியானது.
அந்த வரிசையில் நடிகை ஜனனி தனது சகோதரியுடன் இணைந்து ஆடை விற்பனை செய்யும் வியாபாரத்தில் இறங்கி உள்ளார். அவன் இவன் , தெகிடி. அதே கண்கள், பலூன், பாகன், விதி மதி உல்டா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள வேஷம், கசட தபற அந்தாலஜி, பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் உள்ளிட்ட படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு அவருடைய தங்கையுடன் சேர்ந்து புதிய வியாபாரம் ஒன்றை துவங்கியுள்ளார். தி ஹசல் அவென்யூ என்ற இணையத்தளம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, மாடர்ன் உடைகளை விற்பனை செய்கிறார். அவர் விற்கும் உடைகளுக்கு அவரே விளம்பர மாடல் ஆகவும் உள்ளார்.
நடிகர், நடிகையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் ஜனனி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களாக இருக்கிறார்களாம். சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பெயரை அகற்றியதால் பாராட்டப்பட்டவர் ஜனனி என்பது குறிப்பிடத்தக்கது.