ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! |

சமீபத்தில் நடிகை யாஷிகா கார் ஓட்டிவந்தபோது மகாபலிபுரம் அருகில் விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகா உள்ளிட்ட இரண்டு நண்பர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவரது உயிர்த்தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்த யாஷிகா தற்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டபோதும் தனது வீட்டிற்கு செல்லாமல் ஒரு நர்ஸின் வீட்டில் தங்கி உள்ளார்.
அதுகுறித்து யாஷிகா கூறுகையில், தனக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது வலி குறைந்துள்ளது. எனது வீட்டிற்கு சென்றால் எனது தோழி பவனியின் ஞாபகம் வரும். அதனால் தான் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.




