'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபத்தில் நடிகை யாஷிகா கார் ஓட்டிவந்தபோது மகாபலிபுரம் அருகில் விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகா உள்ளிட்ட இரண்டு நண்பர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவரது உயிர்த்தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்த யாஷிகா தற்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டபோதும் தனது வீட்டிற்கு செல்லாமல் ஒரு நர்ஸின் வீட்டில் தங்கி உள்ளார்.
அதுகுறித்து யாஷிகா கூறுகையில், தனக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது வலி குறைந்துள்ளது. எனது வீட்டிற்கு சென்றால் எனது தோழி பவனியின் ஞாபகம் வரும். அதனால் தான் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.