நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சமீபத்தில் நடிகை யாஷிகா கார் ஓட்டிவந்தபோது மகாபலிபுரம் அருகில் விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகா உள்ளிட்ட இரண்டு நண்பர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவரது உயிர்த்தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்த யாஷிகா தற்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டபோதும் தனது வீட்டிற்கு செல்லாமல் ஒரு நர்ஸின் வீட்டில் தங்கி உள்ளார்.
அதுகுறித்து யாஷிகா கூறுகையில், தனக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது வலி குறைந்துள்ளது. எனது வீட்டிற்கு சென்றால் எனது தோழி பவனியின் ஞாபகம் வரும். அதனால் தான் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.