ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' | ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பழிவாங்கும் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ் | 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை | ஆஸ்கர் புகழ் நாட்டு நாட்டு பாடகருக்கு திருமண நிச்சயதார்த்தம் | நடிகர் விஷ்ணுவர்தனின் புதிய நினைவிடத்திற்காக இலவசமாக நிலம் வழங்கிய கிச்சா சுதீப் | வார் 2 : 300 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அறிமுகப்படுத்தியவர்களிடம் அதிக சம்பளம் கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்? | பவன் கல்யாண் மீது முன்னாள் அதிகாரி வழக்கு | மார்ஷல் படத்தில் வில்லன் யார்... |
சமீபத்தில் நடிகை யாஷிகா கார் ஓட்டிவந்தபோது மகாபலிபுரம் அருகில் விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகா உள்ளிட்ட இரண்டு நண்பர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவரது உயிர்த்தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்த யாஷிகா தற்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டபோதும் தனது வீட்டிற்கு செல்லாமல் ஒரு நர்ஸின் வீட்டில் தங்கி உள்ளார்.
அதுகுறித்து யாஷிகா கூறுகையில், தனக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது வலி குறைந்துள்ளது. எனது வீட்டிற்கு சென்றால் எனது தோழி பவனியின் ஞாபகம் வரும். அதனால் தான் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.