தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் பழைய படங்களின் கதையை அப்படியே சுட்டு, இந்தக் காலத்திற்கேற்றபடி சில பல மானே, தேனே, பொன்மானே சேர்த்து புதுக் கதை போல பிரம்மாண்டமாகக் கொடுப்பவர் இயக்குனர் அட்லீ என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு.
மௌன ராகம் படத்தை ராஜா ராணி ஆகவும், சத்ரியன் படத்தை தெறி ஆகவும், அபூர்வ சகோதர்கள் படத்தை மெர்சல் ஆகவும், சில பல தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் படங்களை எடுத்து பிகில் ஆகவும் கொடுத்தார் என்பதை இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அட்லீ, பாலிவுட் வரை சென்றுவிட்டார். ஷாரூக்கான் நாயகனாக நடிக்க அவர் இயக்க உள்ள ஹிந்திப் படத்தின் அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பட அறிவிப்புக்காக தனியாக ஒரு டீசரை ரெடி செய்து வருகிறார் என்கிறார்கள்.
அதே சமயம் இப்படத்தின் கதை, 2006ல் விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்து, உதயன் என்ற இயக்குனர் இயக்கிய பேரரசு படத்தின் கதை என்றும் அரசல், புரசலாகப் பரவியுள்ளது. தனது அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்க ஒரு விஜயகாந்த் துடிக்கிறார். அந்த விஜயகாந்த் கொலை செய்யத் துடிப்பவர்களை, போலீஸ் அதிகாரியான மற்றொரு விஜயகாந்த் காப்பாற்றத் துடிக்கிறார். இதுதான் பேரரசு படத்தின் கதைச்சுருக்கம்.
மெர்சல் கதையும் ஏறக்குறைய இப்படித்தானே இருக்கும். நிறைய பழைய தமிழ்ப் படங்களைப் பாருங்கள் இளம் இயக்குனர்களே, அதிலிருந்தே உங்களுக்கு பல இன்ஸ்பிரேஷன்கள் கிடைக்கும். கவனிக்க, இன்ஸ்பிரேஷன் என்றே சொல்கிறோம். காப்பி என்று சொல்லவில்லை.