எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன்பு யாஷிகா நள்ளிரவில் நண்பர்களுடன் அதிவேகமாக காரில் பயணித்து வந்த போது கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் யாஷிகாவின் நண்பர் வள்ளிச் செட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது ஆண் நண்பர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் யாஷிகாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அறுவை சிகிச்சை உள்ளாக்கப்பட்டார். தற்போது யாஷிகா உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில் யாஷிகாவுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அதில் "டார்லிங் இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். எனவே தான் நாம் இதை விபத்து என்கிறோம். ஜனனம் மற்றும் மரணம் இரண்டும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. யாரும் அதை மாற்ற முடியாது. எனவே நீயும் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளாய். உனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சம்பவத்திற்கு உன்னை நீயே குற்றம் சொல்வதை முதலில் நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிடு. உன் மனசாட்சியை உறுதியாக வைத்துக் கொள். மற்றவற்றை நீயே கவனித்துக் கொள்ளலாம். இந்த கோர விபத்தில் இருந்து நீ தப்பித்து இருக்கிறாய் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.