டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஆல்பம் இசை கலைஞராக இருந்து திரைப்பட இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. அவர் தற்போது இயக்கி , நடித்து வரும் படம் சிவகுமாரின் சபதம். இதில் மாதுரி அவரது ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருகிறார் ஆதி.
முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். நாயகி (மாதுரி ) நாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைந்துருகி பாடுவதாக வரும் பாடல் இது.
படத்திற்கு அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கிறது.