பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து, திரையரங்குகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கிறது. அதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. திரையரங்கு உரிமையாளர்களுக்கோ பராமரிப்பு செலவு, கோடியை தாண்டிக் கொண்டிருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடியதால், ஏப்., - மே மாதங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொழில்நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்து விட்டன. எப்போதும் போல் கடைகள் நடத்தப்படுகின்றன. ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. வணிக வளாகங்கள் செயல்படுகின்றன. பொதுப்போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகள் அறிவித்திருந்தாலும், அவற்றை கடந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, வழக்கமான பணிகளை செய்யத் துவங்கி விட்டனர். 100க்கு, 85 சதவீதத்தினர் முக கவசம் அணிகின்றனர். மீதமுள்ளோர் அலட்சியமாக இருக்கின்றனர்.
ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகள் திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் அதிகமானோர் அமர்ந்திருப்பர்; இடைவேளை சமயத்தில் ஒரே ஹாலில் அருகருகே கூடி நிற்பர்; பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவர் என்பதால், தொற்று பரவ வாய்ப்பிருப்பதாக, சுகாதாரத்துறையினர் அச்சப்படுகின்றனர். அதேநேரம் கொரோனா முதல் அலை கட்டுக்குள் வந்தபோது, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கு திறக்க, அப்போதைய தமிழக அரசு அனுமதி அளித்தது. துரதிர்ஷ்டவசமாக, அப்போது புதிய திரைப்படங்கள் வெளியிடாததால், திரையரங்கு பக்கம் வர, ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இரண்டாம் அலை பரவ ஆரம்பித்ததில் இருந்து, பல மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடப்பதால், ஊழியர்களின் குடும்பங்கள் நிர்கதியாய் நிற்கின்றன. திரையரங்கு உரிமையாளர்கள், நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களின் நஷ்டக் கணக்கு கோடியை தாண்டி விட்டது. சில திரையரங்கு உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு, 50 சதவீத சம்பளத்தை வழங்கி வருகின்றனர். சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதால், ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை இருக்கிறது. பல ஊழியர்கள், அடிப்படை தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.