நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
பொதுவாகவே போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அடிக்கடி நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டும் சினிமா ஹீரோக்கள், வக்கீலாக நடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் அந்த கதாபாத்திரத்திற்காக பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டும் என்பதுடன், அதில் ஆக்சன் காட்சிகளுக்கும் வாய்ப்பு ரொம்பவே குறைவு என்பதும் மிக முக்கிய காரணம்.
அதனால் தான் கடந்த இருபது வருடங்களுக்கு முன் தமிழன் என்கிற ஒரே ஒரு படத்தில் வழக்கறிஞராக நடித்த விஜய், அதன்பின் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யவில்லை. அவரது தந்தை இயக்கிய சுக்ரன் படத்தில் கூட கெஸ்ட் ரோலில் தான் லாயராக நடித்திருந்தார். இத்தனை வருட திரையுலக பயணத்தில் அஜித்தும் கூட 'நேர்கொண்ட பார்வை' என்கிற ஒரு படத்தில் தான் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
அதேபோல இத்தனை வருடங்களில் நடிகர் சூர்யாவும் தற்போது தான் ஜெய் பீம் என்கிற படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடித்திருக்கிறார். அதிலும் கூட இந்தப்படத்தில் அவர் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொண்ணூறுகளில் பக்கம் பக்கமாக வசனங்களை பேசி அதற்காகவே கைதட்டல் வாங்கிய விஜயகாந்த் கூட, ஒருசில படங்களில் மட்டுமே வழக்கறிஞராக நடித்திருந்தார் என்கிறபோது மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?