டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பொதுவாகவே போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அடிக்கடி நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டும் சினிமா ஹீரோக்கள், வக்கீலாக நடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் அந்த கதாபாத்திரத்திற்காக பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டும் என்பதுடன், அதில் ஆக்சன் காட்சிகளுக்கும் வாய்ப்பு ரொம்பவே குறைவு என்பதும் மிக முக்கிய காரணம்.
அதனால் தான் கடந்த இருபது வருடங்களுக்கு முன் தமிழன் என்கிற ஒரே ஒரு படத்தில் வழக்கறிஞராக நடித்த விஜய், அதன்பின் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யவில்லை. அவரது தந்தை இயக்கிய சுக்ரன் படத்தில் கூட கெஸ்ட் ரோலில் தான் லாயராக நடித்திருந்தார். இத்தனை வருட திரையுலக பயணத்தில் அஜித்தும் கூட 'நேர்கொண்ட பார்வை' என்கிற ஒரு படத்தில் தான் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
அதேபோல இத்தனை வருடங்களில் நடிகர் சூர்யாவும் தற்போது தான் ஜெய் பீம் என்கிற படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடித்திருக்கிறார். அதிலும் கூட இந்தப்படத்தில் அவர் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொண்ணூறுகளில் பக்கம் பக்கமாக வசனங்களை பேசி அதற்காகவே கைதட்டல் வாங்கிய விஜயகாந்த் கூட, ஒருசில படங்களில் மட்டுமே வழக்கறிஞராக நடித்திருந்தார் என்கிறபோது மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?




