25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காதல் பின்னணியில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்..
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆனாலும் இந்தப்படத்தின் அப்டேட் குறித்து சமீபகாலமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார், தனது டுவிட்டர் பக்கத்தில் “இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.. மூன்றே நாட்கள் பொறுத்திருங்கள் அன்பான டார்லிங் (பிரபாஸ்) ரசிகர்களே. அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாக போகிறது” என வேண்டுகோள் வைத்து பிரபாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளார்.