என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காதல் பின்னணியில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர்  இயக்கியுள்ளார்..
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆனாலும் இந்தப்படத்தின் அப்டேட் குறித்து சமீபகாலமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார், தனது டுவிட்டர் பக்கத்தில் “இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.. மூன்றே நாட்கள் பொறுத்திருங்கள் அன்பான டார்லிங் (பிரபாஸ்) ரசிகர்களே. அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாக போகிறது” என வேண்டுகோள் வைத்து பிரபாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளார்.
 
           
             
           
             
           
             
           
            