நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு |

கேரளாவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. இது குறித்து நடிகை சுவாசிகா நேர்காணல் ஒன்றில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: திருமண வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயம், குடும்ப சூழ்நிலை போன்ற பல காரணங்களால் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர். நான் திருமணம் செய்து கொள்ளும்போது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை தீர்க்க முடிந்தவரை முயற்சி செய்வேன். நிலைமை கைமீறி போனால் விவாகரத்து பற்றி யோசிப்பேன்.
இரண்டு பேர் மகிழ்ச்சியோடு வாழத்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். தாங்கமுடியாத பிரச்சினைகள் வரும்போது விவாகரத்து செய்து கொள்வது சிறந்த வழியாகும். தற்கொலை செய்து கொள்வது கொடுமையானது.
விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானதுதான். அது ஒரு புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. பெண்கள் மோசமான வாழ்க்கைக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரச்சினைகள் வரும்போது சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுவாசிகா தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.