ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதுமட்டுமல்ல சோஷியல் மீடியாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் சூடாகவே வைத்திருப்பவர். அதேசமயம் இன்னொரு பக்கம் அதே சோஷியல் மீடியாவை பயன்படுத்தி நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் மாளவிகா மோகனன்.
அந்தவகையில் கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த பழங்குடி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதற்கு வசதியாக மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை வாங்குவதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து சோஷியல் மீடியா மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்தார் மாளவிகா மோகனன். ரசிகர்களும் ஆர்வமாக முன்வந்து உதவி செய்தனர்.
தற்போது அந்த மாணவர்களுக்கு 8 டேப்லெட்டுகள், 7 ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார் மாளவிகா. மேலும் அந்த மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு இன்டர்நெட் வசதியையும் ஏற்படுத்தி தர விரும்பியுள்ள மாளவிகா மோகனன். அதற்காகவும் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.




