என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதுமட்டுமல்ல சோஷியல் மீடியாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் சூடாகவே வைத்திருப்பவர். அதேசமயம் இன்னொரு பக்கம் அதே சோஷியல் மீடியாவை பயன்படுத்தி நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் மாளவிகா மோகனன்.
அந்தவகையில் கேரளாவில் வயநாடு பகுதியை சேர்ந்த பழங்குடி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கற்பதற்கு வசதியாக மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை வாங்குவதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து சோஷியல் மீடியா மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்தார் மாளவிகா மோகனன். ரசிகர்களும் ஆர்வமாக முன்வந்து உதவி செய்தனர்.
தற்போது அந்த மாணவர்களுக்கு 8 டேப்லெட்டுகள், 7 ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார் மாளவிகா. மேலும் அந்த மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு இன்டர்நெட் வசதியையும் ஏற்படுத்தி தர விரும்பியுள்ள மாளவிகா மோகனன். அதற்காகவும் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.