டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் |

சமீப காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் காதல் கதைகள் தனிப் பெரும் இடத்தை பிடித்து வருவது போல் அதில் நடிக்கும் நாயகன், நாயகியும் அவர்களுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புதிய ஜோடியுடன் சுவாரசியமான காதல் கதையோடு விஜய் டிவியில் ஒரு புதிய தொடர் வெளிவந்துள்ளது.
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில், எஸ்.குமரன் இயக்கும் புதிய மெகா தொடர் "தமிழும் சரஸ்வதியும்". நாயகன், நாயகி இருவருக்குமே படிப்பில் பிரச்னை. தான் சரியாக படிக்காததால் தன் மனைவியாவது நன்றாக படித்திருக்க வேண்டும் என நினைக்கிறார் நாயகன். ஆனால், படிப்பில் திணறும் நாயகிக்கும் நாயகனுக்கும் எப்படி காதல் உருவ போகிறது என்பது தான் கதையின் மையக்கரு.
சரவணன் - மீனாட்சி தொடங்கி ஆதி - பார்வதி வரை இன்றைய தலைமுறையினர் தொலைக்காட்சி தொடர்களில் வரும் காதல் ஜோடிகளை கொண்டாடி பிரபலமாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே தொலைக்காட்சி தொகுப்பாளர்களாகவும், சின்னத்திரை நட்சத்திரங்களாகவும் புகழ் பெற்ற தீபக் - நக்ஷத்திரா ஜோடி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபக் தினகரனை ஏற்கனவே தென்றல் தொடரின் மூலம் காதல் நாயகனாக இயக்கிருந்தார் எஸ்.குமரன். இவர்களது கூட்டணியில் மீண்டும் ஓர் காதல் கதை என்பதும் நேயர்கள் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.
"தமிழும் சரஸ்வதியும்" தொடர் ஜுலை 12 ஆம் தேதி முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.