மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நான்கு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிவுற்றது.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. இந்த மருத்துவ பரிசோதனைகளை முடித்து கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வதார் ரஜினி. இந்நிலையில் தற்போது 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.
இந்த படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பெலிசியா டவர்சில் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்துக்கொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்போடு ரஜினி தொடர்பாக மொத்த காட்சிகளும் முடிக்கப்பட்டுவிடும்.
இதையடுத்து கோல்கட்டா செல்லும் படக்குழு அங்கு சில காட்சிகளையும், தொடர்ந்து லக்னோவில் சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம் இந்த இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பிறகு வரும் 25ம் தேதி முதல் டப்பிங் பணிகளில் ரஜினி கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.