என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகர் விஷால் - து.பா.சரவணன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. விஷாலின் 31வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
கொரானா ஊடரங்கு தளர்வு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டிருந்தார் விஷால் இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
இதில் விஷாலை ஒருவர் தாக்க, பின்புறமாக ஒரு இடத்தில் சாய்ந்து விழுகிறார். அப்போது முதுகில் காயம் ஏற்பட்டு வலியால் துடிக்கிறார் விஷால். அதன்பிறகு உடனடியாக மருத்துவர் அணுகி பரிசோதித்த பிறகு பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் தடைப்பட்டது.