சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சினிமாவில் சில முதல் விஷயங்கள் நிராசையாகிப் போகாமல் நிறைவேற வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். அப்படியான ஒரு முதல் கனவு 'இந்தியன் 2' படம் மூலம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு அமைந்தது. அந்தக் கனவு நனவானாலும், முழுவதுமாக நிறைவேறாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கும் படத்திற்கு முதல் முறை இசை, கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு முதல் முறை இசை என 'இந்தியன் 2' பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் ஒப்பந்தமான பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியன் 2' படம் எனக்குக் கிடைத்ததும் மிக உற்சாகமாக இருந்தேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே நான் ஷங்கரின் பெரிய ரசிகன். அதோடு நான் கமல் சாருடனும் பணியாற்றியது இல்லை. மேலும், 'இந்தியன்' படம் அவர்களது மிகச் சிறந்த படம். எனது கனவு நனவானது. அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு நண்பனுடன், 25 வயதுடைய ஒரு இயக்குனருடன் பணியாற்றுவது போல இருக்கிறது,” என்றெல்லாம் பெரும் உற்சாகத்துடன் பேசியிருக்கிறார்.
'இந்தியன் 2' படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் மேற்கொண்டு வளராமல் இருப்பதில் தயாரிப்பாளருக்கு எந்த அளவிற்கு கவலையோ அந்த அளவிற்கு அனிருத்திற்கும் இருக்கும். தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் படைப்பாளிகளுடன் முதல் முதலில் இணைந்த படம் முடிந்து திரைக்கு வருவதில் தான் அவருடைய கனவிற்கும், உற்சாகத்திற்கும் ஒரு அர்த்தத்தைத் தரும்.
அனிருத்துக்காகவாவது ஷங்கர், 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுப்பாரா?.