துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நடிகர் விஜய் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன், விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்ய, எந்த விதிகளை பின்பற்ற வேண்டும்; விஜய் விவகாரத்தில், எங்கே தவறு நடந்திருக்கலாம் என்பது குறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்ய, கடந்த காலங்களில், இந்தியாவில், டீலர்கள் இல்லை. ஆனால், தற்போது, பல மாநில தலைநகர்களிலும், வெளிநாட்டு கார் விற்பனை டீலர்கள் வந்து விட்டனர். இருந்தாலும், ஒரு சில வெளிநாட்டு கார்களுக்கு, இந்தியாவில் இப்போதும் டீலர்கள் இல்லை. அதுபோன்ற கார்களை, நேரடி இறக்குமதி செய்ய வேண்டும்.
வரி எப்படி மதிப்பிடப்படுகிறது
கார் இறக்குமதி செய்பவர்கள், சுங்க துறையினருக்கு, காரின் விலையில் 200 சதவீதம் ஜி.எஸ்.டி.,யுடன் கூடிய சுங்க வரி செலுத்த வேண்டும். அதன்பின், கார் விலை மற்றும் சுங்கவரி சேர்த்து, எவ்வளவு தொகை வருகிறதோ, அதில் 20 சதவீதம் நுழைவு வரி செலுத்த வேண்டும். நுழைவு வரி தொகையை, மாநில வணிக வரித்துறையிடம் செலுத்த வேண்டும் இந்த விபரங்களுடன் சென்று, மண்டல போக்குவரத்து அலுவலகத்தில், காரை பதிவு செய்ய வேண்டும். அப்போது, மோட்டார் வாகன வரி செலுத்த வேண்டும். காரின் விலை, சுங்க வரி, நுழைவு வரி எல்லாம் சேர்த்து எவ்வளவு வருகிறதோ, அது 10 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அதில் 10 சதவீதம் செலுத்த வேண்டும். கூடுதலாக இருந்தால், மொத்த மதிப்பில் 15 சதவீதம் செலுத்த வேண்டும்.
காரை வேறொரு ஊருக்கு எடுத்துச் சென்று, பதிவு செய்யும்போது 2 சதவீத தொகையை கழித்து, மீதமிருக்கும் தொகையை செலுத்தினால் போதும். தற்காலிக பர்மிட் 30 நாட்கள் செல்லும். அதற்குள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். நாட்கள் கடந்தால், அதற்கும் அபராத தொகை உண்டு. அதோடு, செகண்ட்ஸ் கார்களை இறக்குமதி செய்யும் போது, இந்திய சாலைகளில் இயக்க கூடிய நிலையில் இருக்கிறதா என்பதை பரிசோதித்து, சான்றிதழ் பெற வேண்டும். அதற்கு பின்பே, இறக்குமதி வரியை சுங்க துறையினர் வசூலிப்பர். தகுதியானதாக இல்லை என்றால், திருப்பி அனுப்பப்படும்.