மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதனால் இதன் முதல் பாகத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதை முடித்துவிட்டு மீண்டும் புஷ்பா-2வுக்கு திரும்பலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ புஷ்பாவின் இரண்டாம் பாகத்தையும் ஒருசேர முடித்துவிட்டு அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க செல்லட்டும் என நினைக்கிறாராம். காரணம் புஷ்பா படம் செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடி எல்லாம் வளர்த்து ரப் அன்ட் டப்பான ஆளாக மாறியுள்ளதோடு, உடல் எடையையும் கூட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.
இன்னொரு படத்தில் நடித்துவிட்டு வந்தால் மீண்டும் கெட்டப் மாற்றி இரண்டாம் பாகத்தை முடிக்க தாமதமாகி விடும் என தயாரிப்பாளர் கருதுகிறாராம். இருந்தாலும் இதை அல்லு அர்ஜுனிடம் எப்படி சொல்வது என இயக்குனர் சுகுமார் தயங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.