14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதனால் இதன் முதல் பாகத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதை முடித்துவிட்டு மீண்டும் புஷ்பா-2வுக்கு திரும்பலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ புஷ்பாவின் இரண்டாம் பாகத்தையும் ஒருசேர முடித்துவிட்டு அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க செல்லட்டும் என நினைக்கிறாராம். காரணம் புஷ்பா படம் செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடி எல்லாம் வளர்த்து ரப் அன்ட் டப்பான ஆளாக மாறியுள்ளதோடு, உடல் எடையையும் கூட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.
இன்னொரு படத்தில் நடித்துவிட்டு வந்தால் மீண்டும் கெட்டப் மாற்றி இரண்டாம் பாகத்தை முடிக்க தாமதமாகி விடும் என தயாரிப்பாளர் கருதுகிறாராம். இருந்தாலும் இதை அல்லு அர்ஜுனிடம் எப்படி சொல்வது என இயக்குனர் சுகுமார் தயங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.