டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் குறூப், சல்யூட், தமிழில் ஹே ஷினாமிகா என மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான், ஏற்கனவே கொரோனா அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தெலுங்கு படத்தில் தற்போது நடிக்க துவங்கி விட்டார். மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் துல்கர் நடிக்கும் இரண்டாவது படம் இது.
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். அதனால் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள துல்கர் சல்மான், அங்குள்ள ஜிம் ஒன்றில் தீவிர பயிற்சி செய்து வருகிறார். அவருடன் கூடவே சகுந்தலம் படத்தில் சமந்தாவின் ஜோடியாக நடித்து வரும் தேவ் மோகன் என்பவரும் ஜிம் கூட்டாளியாக இணைந்துள்ளார். இவர் சூபியும் சுஜாதையும் படத்தில் அதிதி ராவ் காதலனாக அறிமுகமானவர்.
துல்கர் சல்மானும் தானும் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் தேவ் மோகன். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.