‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

மலையாளத்தில் குறூப், சல்யூட், தமிழில் ஹே ஷினாமிகா என மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான், ஏற்கனவே கொரோனா அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தெலுங்கு படத்தில் தற்போது நடிக்க துவங்கி விட்டார். மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் துல்கர் நடிக்கும் இரண்டாவது படம் இது.
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். அதனால் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள துல்கர் சல்மான், அங்குள்ள ஜிம் ஒன்றில் தீவிர பயிற்சி செய்து வருகிறார். அவருடன் கூடவே சகுந்தலம் படத்தில் சமந்தாவின் ஜோடியாக நடித்து வரும் தேவ் மோகன் என்பவரும் ஜிம் கூட்டாளியாக இணைந்துள்ளார். இவர் சூபியும் சுஜாதையும் படத்தில் அதிதி ராவ் காதலனாக அறிமுகமானவர்.
துல்கர் சல்மானும் தானும் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் தேவ் மோகன். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.