ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமாவில் மிக பிஸியான சண்டைப்பயிற்சி இயக்குனர்களாக வலம் வருபவர்கள் ராம், லட்சுமணன் செல்லா என்கிற இரட்டையர். தர்பார் படத்தில் கண்ணுல திமிரு பாடலுக்கு நடனமாடிக்கொண்டே ரஜினிகாந்த் சண்டையிடும் சண்டைக்காட்சியை வடிவமைத்தவர்கள் இவர்கள்தான். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து சமீபத்தில் இவர்கள் வெளியேறிய நிலையில், தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துவரும் அகண்டா என்கிற படத்தில் இருந்தும் இவர்கள் வெளியேறி உள்ளனர். பாலகிருஷ்ணாவின் படங்களுக்கு பில்டப்புடன் சண்டைக்காட்சிகளை அமைத்துக் கொடுத்தவர்கள் வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தெலுங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு எல்லாம், ஒரே சமயத்தில் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதனால், ஏற்கனவே ராம், லட்சுமணன் செல்லா இரட்டையர் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்களுக்கு பணி புரிவதற்காக தேதிகளை ஒதுக்கிக் கொடுத்து இருந்ததால் ஆர்ஆர்ஆர் மற்றும் அகண்டா ஆகிய படங்களில் இருந்து வேறுவழியின்றி தான் விலகியுள்ளனராம்.