கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? | புரோட்டா நடிகருக்கு 'ஷாக்' கொடுத்த அமரன் | 'நாயகி' ஆன பேஷன் டிசைனர் சுஷ்மா நாயர் | மன வருத்ததுடன் பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பும் ராஷி கண்ணா ; காரணம் இதுதான் |

முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ராதா. ஆனால் சினிமாவில் பெரிதாக எதிர்காலம் இல்லாததால் பின்னர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராதா பின்னர் அவரை விவாகரத்து பெற்றார். அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவரை இரண்டாவதாக திருணம் செய்து கொண்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கடந்த ஏப்ரல் அவர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார் ராதா. அதன்பிறகு இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை இணை கமிஷனர் நரேந்திரன் நாயரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் நடிகை ராதா.
அந்தபுகார் மனுவில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக கூறிய வசந்தராஜா, போலீசில் புகார் கொடுத்து என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருப்பவர், வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இளம்வருதி, பாரதி ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.