மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” |

நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்சடா. தற்போது தெலுங்கில் எப் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இவருக்கும், பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா பிரச்னையால் திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்று மூன்று மாதத்திற்கு பிறகு பவ்யாவை பிரிவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மெஹ்ரீன் பிர்சடா.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது : நானும், பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்தாகிறது. எங்களின் திருமணமும் நடக்காது. இருவரின் நலன் கருதி இருவரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இனி பவ்யா அவரது குடும்பத்தினர் எந்த தொடர்பும் இல்லை. இனி வழக்கமான என் பணிகளை தொடர்வேன். சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பேன். என் தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.