
பிரித்விராஜிடம் டைரக்ஷன் நுணுக்கங்கள் கற்ற அதிதி பாலன்
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதிதி பாலன் கூறும்போது, "படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முதல் நாள் வரை பிரித்விராஜை நேரில் சந்தித்தது கிடையாது. அவர் பெர்பெக்ட் ஆன நடிகர் என்பதால், அவருடன் இணைந்து நடிக்கும் போது சரியாக நடிக்க வேண்டுமே என்கிற பதட்டம் கொஞ்சம் இருந்தது. ஆனால் இரண்டாவது நாளிலிருந்து எனது டென்ஷனை போக்கிய பிரித்விராஜ், நடிப்பில் சில நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக அவர் ஒரு இயக்குனரும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும், இயக்குனர் கண்ணோட்டத்துடன் எப்படி அணுகுகிறார் என்பதையும் என்னால் கவனிக்க முடிந்தது. இந்த படம் ஒரு மரணம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவரும், பத்திரிக்கை நிருபர் ஒருவரும், இரண்டு பாதைகளில் நடத்தும் விசாரணையாக உருவாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக பிரித்விராஜும், பத்திரிக்கை நிருபராக நானும் நடித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!