அரசியலில் ஜீரோ-வைக் கண்டுபிடித்த பவன் கல்யாண் : ராம் கோபால் வர்மா காட்டம் | மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷின் 51வது படம் | வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம் | கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி : யஷ் ஜோடி ஆகிறார் | பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம் | மம்முட்டி படத்துக்கு திடீர் எதிர்ப்பு | வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் : கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி | நடிகர் ரஹ்மானின் மகள் திருமணத்திற்காக ஒன்றுகூடிய 80ஸ் நட்சத்திரங்கள் | ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன் | அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி |
அருவி என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். தற்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் படவேட்டு என்கிற படம் தான், முதலில் அவர் ஒப்பந்தமாகி நடித்து வந்தாலும், அதற்கு அடுத்ததாக, பிரித்விராஜ் உடன் இணைந்து நடிக்கும் கோல்ட் கேஸ் பட வாய்ப்பை பெற்று, அந்த படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தநிலையில் படவேட்டு படத்தை முந்திக் கொண்டு கோல்ட் கேஸ் படம் இன்று (ஜூன் 30) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதிதி பாலன் கூறும்போது, "படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முதல் நாள் வரை பிரித்விராஜை நேரில் சந்தித்தது கிடையாது. அவர் பெர்பெக்ட் ஆன நடிகர் என்பதால், அவருடன் இணைந்து நடிக்கும் போது சரியாக நடிக்க வேண்டுமே என்கிற பதட்டம் கொஞ்சம் இருந்தது. ஆனால் இரண்டாவது நாளிலிருந்து எனது டென்ஷனை போக்கிய பிரித்விராஜ், நடிப்பில் சில நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக அவர் ஒரு இயக்குனரும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும், இயக்குனர் கண்ணோட்டத்துடன் எப்படி அணுகுகிறார் என்பதையும் என்னால் கவனிக்க முடிந்தது. இந்த படம் ஒரு மரணம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவரும், பத்திரிக்கை நிருபர் ஒருவரும், இரண்டு பாதைகளில் நடத்தும் விசாரணையாக உருவாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக பிரித்விராஜும், பத்திரிக்கை நிருபராக நானும் நடித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்