மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
அருவி என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். தற்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் படவேட்டு என்கிற படம் தான், முதலில் அவர் ஒப்பந்தமாகி நடித்து வந்தாலும், அதற்கு அடுத்ததாக, பிரித்விராஜ் உடன் இணைந்து நடிக்கும் கோல்ட் கேஸ் பட வாய்ப்பை பெற்று, அந்த படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தநிலையில் படவேட்டு படத்தை முந்திக் கொண்டு கோல்ட் கேஸ் படம் இன்று (ஜூன் 30) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதிதி பாலன் கூறும்போது, "படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முதல் நாள் வரை பிரித்விராஜை நேரில் சந்தித்தது கிடையாது. அவர் பெர்பெக்ட் ஆன நடிகர் என்பதால், அவருடன் இணைந்து நடிக்கும் போது சரியாக நடிக்க வேண்டுமே என்கிற பதட்டம் கொஞ்சம் இருந்தது. ஆனால் இரண்டாவது நாளிலிருந்து எனது டென்ஷனை போக்கிய பிரித்விராஜ், நடிப்பில் சில நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக அவர் ஒரு இயக்குனரும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும், இயக்குனர் கண்ணோட்டத்துடன் எப்படி அணுகுகிறார் என்பதையும் என்னால் கவனிக்க முடிந்தது. இந்த படம் ஒரு மரணம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவரும், பத்திரிக்கை நிருபர் ஒருவரும், இரண்டு பாதைகளில் நடத்தும் விசாரணையாக உருவாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக பிரித்விராஜும், பத்திரிக்கை நிருபராக நானும் நடித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்