அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அருவி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் படவேட்டு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதையடுத்து பிரித்விராஜ் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் 'கோல்ட் கேஸ்' (cold case) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார் அதிதி பாலன். பிரித்விராஜ் இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அதிதி பாலன் இதில் துணிச்சலான பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்தப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்தப்படம் பற்றி அதிதி பாலன் கூறும்போது, “நானும், என் அம்மாவும் சேர்ந்துதான் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டையே படித்தோம். இதில் எனக்கு தனித்தன்மை வாய்ந்த துணிச்சலான பத்திரிகையாளர் கதாபாத்திரம். ஹீரோ பிரித்விராஜூக்கும், எனக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும் நாங்கள் இருவரும் அதிக காட்சிகளில் சேர்ந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நிவின்பாலியுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை வைத்து பார்க்கும்போது, அவரை விட பிரித்விராஜ் கொஞ்சம் சீரியஸான மனிதர் தான்.. ஆனாலும் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாம் நாளே அவருடன் எனக்கு நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது” என கூறியுள்ளார் அதிதி பாலன்.