நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
அருவி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அதிதி பாலன். அதன் பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். 3 வருட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார். கோல்ட் கேஸ், படவேட்டு என்ற இரண்டு மலையாள படங்களில் நடித்து விட்டு மீண்டும் தற்போது தமிழுக்கு வந்திருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருவி படத்திற்கு பிறகு முழுமையான நாயகியாக நடிக்கும் படம் இது.
இதற்கிடையில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தில் நடித்து வந்தார். இதில் பெரிய கேரக்டரில் நடிக்கிறார் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தில் சமந்தாவின் அதாவது கதைப்படி சகுந்தலையின் தோழிகளில் ஒருத்தியாக அவர் நடித்திருப்பது டிரைலர் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு வேளை அவருக்கு கதையில் வேறு முக்கியத்தும் எதுவும் இருக்கிறதா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரிய வரும்.