முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தான் அவர்களது கவனத்தை பெறுவதற்காக ஏதேதோ சாகசங்களை செய்வார்கள் என்றால், சில நடிகைகளின் ரசிகர்களும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடவே செய்கின்றனர். அந்தவகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திப்பதற்காக அவரது தீவிர ரசிகர் ஒருவர் 900 கிமீ பயணித்து அவரது வீட்டை தேடி வந்துள்ளார்.
ஆனாலும் ராஷ்மிகா தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த ரசிகரின் நோக்கம் நிறைவேறாமல் போனது.. கூகுள் மேப்புடன் ராஷ்மிகாவின் வீட்டை அவர் தேடிக்கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரை அழைத்து அறிவுரை கூறி அவரது ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தி ராஷ்மிகாவின் கவனத்திற்கு வரவே இதுகுறித்து வருத்தப்பட்டுள்ள அவர், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “உங்களில் ஒருவர் என்னை சந்திக்க ரொம்ப தொலைவு பயணித்து வந்ததாக கேள்விப்பட்டேன்.. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். அந்த ரசிகரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிகிறது. தயவுசெய்து இதுபோல யாரும் என்னை தேடி வரவேண்டாம்.. நானே உங்களை நேரில் சந்திக்கும் ஒருநாள் வரும். அப்போது சந்திப்போம்” என கூறியுள்ளார்..