பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பான காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் இணைந்து பணிபுரிந்த 'நானும் ரௌடிதான்' படத்திலிருந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அடிக்கடி வெளிநாட்டுப் பயணம், இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்கள் என இந்த காதல் ஜோடி 90ஸ் கிட்ஸ்களை நிறையவே வெறுப்பேற்றியது.
நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருப்பதால்தான் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார் என்ற தகவல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், “நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு விக்னேஷ் சிவன், “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றவற்றிற்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிலளித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இப்போதுதான் கடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை அடுத்து வரப் போவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் எந்த அலை முடிந்ததும் திருமணம் வைத்துக் கொள்ளப்போகிறார் விக்னேஷ் சிவன்?.