கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது காதல் பின்னணியில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன
தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக பெரும்பாலும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசி வருகின்றன. அப்படி ஒரு ஓடிடி நிறுவனம் 500 கோடி ரூபாய் கொடுத்து இந்த படத்தை கைப்பற்ற முயற்சித்தது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரோ அதை நிராகரித்து விட்டார்
இந்த படத்தை நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது தான் தனது முடிவு என்றும் அதுவரை நாங்கள் பொறுமையாக காத்திருக்க தயார் என்றும் கூறிவிட்டாராம் படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தின் பட்ஜெட் ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று அதிகமாகி விட்டது என்றாலும்கூட,. ஓடிடி டீலிங்கை மறு யோசனைக்கு இடமின்றி நிராகரித்து உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.