'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்தபடியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்தராவ் இயக்கத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படம் ஓடிடியில் ரிலீசாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் ரூ. 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரியன் படமான பிளைன்ட் என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த நெற்றிக்கண் படத்தில் கண்பார்வை இல்லாதவராக நடித்துள்ள நயன்தாரா, ஒரு சைக்கோ கொலைகாரனை பழிவாங்கும் கதையில் நடித்துள்ளார்.