ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்த மெகா படங்கள் அந்த முடிவை மாற்றி தியேட்டரை நோக்கி திரும்பி நிற்கின்றன.
அந்த வகையில், ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் என்ற படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாவதாக இருந்தது. ஆனால் சீக்கிரமே தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும் என்பதற்காக அறிகுறிகள் தெரிந்து விட்டதால் பார்டர் படத்தை ஆகஸ்ட் 12-ந்தேதி தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் அருண் விஜய்.