பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
ஆந்திராவை சேர்ந்தவர் ரோகினி சிந்தூரி. கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர் ஐஏஎஸ் தேர்வில் 43வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தின் தும்குருவில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கினார். அப்போது 42 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த மீட்டதன் மூலம் புகழ்பெற்றார். போக்குவரத்து ஒழுங்கு படுத்தல், ஆக்கிரமிப்பு அகற்றல் என அந்த பகுதியின் ஹீரோயின் ஆனார்.
மாண்டியா மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அங்குள்ள மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவது கண்டு திடுக்கிட்டார். அந்த மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் தனிப்பட்ட கழிப்பிடங்களை கட்டி முடித்தார். இந்தியாவின் 3வது சிறந்த மாவட்டமாக மாண்டியாவை மாற்றினார்.
இப்படி பல பணிகளால் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்த அவரது வாழ்க்கை பாரத சிந்தூரி என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாராகிறது. இதனை ஸ்வர்ண சந்திரா என்ற இயக்குனர் இயக்குகிறார். ரோகினி சிந்தூரி வேடத்தில் அக்ஷிதா பாண்டபுரா நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் தலைப்பை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ள இயக்குனர், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்.