பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தெய்வமகள் சீரியலில் பிரபலமான வாணி போஜன், சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு சீரியல்களில் நடித்தே சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர்களை வைத்திருந்தார். அதையடுத்து சினிமாவுக்கு வந்து ஓ மை கடவுளே படம் மூலம் பிரபலமாகி விட்ட வாணி போஜன் தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாணி போஜனிடத்தில், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வர என்ன காரணம்? என்று ஒரு ரசிகர் கேட்டபோது, சின்னத்திரையில் எத்தனை சீரியல்களில் நடித்தாலும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கேரக்டர்களாகத்தான் கிடைக்கும். ஆனால் சினிமாவில் மாறுபட்ட கதைகளில் தயாராவதால் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க முடியும். அதனால் தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் வெற்றி பெறுவதற்கு கவர்ச்சி, திறமை இரண்டில் எது முக்கியம்? என்று இன்னொரு ரசிகர் கேட்டதற்கு, கவர்ச்சியும் தேவை தான். என்றாலும் திறமை இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று பதில் கொடுத்துள்ளார் வாணி போஜன்.