வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சின்னத்திரை நடிகையான வாணி போஜன் இன்று சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு உட்பட இன்னும் சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. வாணி போஜனின் மிரட்டலான நடிப்பில் வெளியான செங்களம் வெப்தொடருக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் பேச்சுலர் பட வாய்ப்பை தவறவிட்டது குறித்து மனம் திறந்துள்ளார். பேச்சுலர் படத்தில் முதலில் ஜி.வி.பிரகாஷுடன் வாணி போஜன் தான் நடிக்க இருந்தார். ஆனால், படத்தில் ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகம் வரும். சீரியல் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த வாணி போஜனுக்கு இது போன்ற காட்சிகளில் நடித்தால் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற பயம் வந்துள்ளது. அதேசமயம் தனக்காக படத்திற்கு தேவையான நெருக்கமான காட்சிகளையும் மாற்றி அமைக்கக்கூடாது என்று யோசித்த அவர், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.




