ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை |

பிரபலமானவர்களின் பெயரில் டுவிட்டர் கணக்கு துவங்குவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் பொழுதைகழிப்பவர்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எப்போதுமே மீடியாக்கள், சமுக வலைத்தளங்களில் இருந்து விலகியே இருப்பவர் மணிரத்னம். தனது படங்கள் குறித்துகூட அதிகம் பேச மாட்டார். எந்த கேள்விக்கும் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில்தான் பதில் சொல்வார்.
அப்படிப்பட்ட மணிரத்தினத்தின் பெயரிலேயே போலி டுவிட்டர் கணக்கை தொடங்கி விட்டார்கள். நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு டுவிட்டரில் அவர் இணைந்திருப்பதாக பரபரப்பை கிளப்பி விட்டார்கள்.
இதுகுறித்து சுஹாசினி மணிரத்னம் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: இயக்குநர் மணிரத்னம் டுவிட்டரில் பக்கம் தொடங்கியிருப்பதாக ஒருவர், டுட் செய்துள்ளார். இது பொய், இவர் ஒரு போலி நபர். இதைப் பற்றி அனைவருக்கும் தெரிவியுங்கள். என்று கூறியிருக்கிறார்.