'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

'கயல்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சந்திரனும், பிரபல டிவி தொகுப்பாளரான அஞ்சனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று வயது ஆண் குழந்தையும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகமான பாலோயர்கள் கொண்டவர் அஞ்சனா. டிவி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான ஒருவர். அவருக்கு ஒரு நபர் தொலைபேசி வழியே தொடர்ந்து அநாகரிகமாக தொல்லை தருவதாக சந்திரனும், அஞ்சனாவும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அது தொடர்பாக சந்திரனும், அஞ்சனாவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
“சில வருடங்களுக்கு முன்பு இதே போல கடினமான நேரத்தில் தொல்லை இருந்தது, பின்னர் சைபர் கிரைம் மூலமாக பிரச்சினை தீர்ந்தது. அது போலவே இப்போதும் தொல்லைகள். தனிப்பட்ட மெசேஜ்கள் நிறைய வருகின்றன. அவற்றை நான் பிளாக் செய்துள்ளேன். ஆனால், இது இன்னும் அப்படியே இருந்து பயப்பட வைக்கிறது,” என அஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பலர் பொய்யான கணக்குகள் மூலம் பிரபலங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பது மனநோயாக உள்ளது. போலியான முகத்தைக் காட்டாத தளங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அவற்றை செய்ய வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்து பலரது விருப்பமாக உள்ளது. அப்படி போலியான கணக்குகள் தடை செய்யப்பட்டால் டுவிட்டர் உள்ளிட்ட தளங்களில் நடக்கும் அருவெறுக்கத்தக்க விஷயங்கள் நிறையவே குறையும்.