'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜுனியர் என்டிஆர். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என டுவீட் செய்துள்ளார். “எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நெகட்டிவ் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. கோவிட் 19 தொற்றை நாம் மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நல்ல பாசிட்டிவ் மனநிலையுடன், கவனத்துடன் அதை வெற்றி கொள்ள முடியும். இந்த போராட்டத்தில் உங்கள் மன வலிமை தான் சக்தி வாய்ந்தது, வலிமையாக இருங்கள், அச்சப்பட வேண்டாம்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜுனியர் என்டிஆர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.