பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜுனியர் என்டிஆர். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என டுவீட் செய்துள்ளார். “எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நெகட்டிவ் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. கோவிட் 19 தொற்றை நாம் மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நல்ல பாசிட்டிவ் மனநிலையுடன், கவனத்துடன் அதை வெற்றி கொள்ள முடியும். இந்த போராட்டத்தில் உங்கள் மன வலிமை தான் சக்தி வாய்ந்தது, வலிமையாக இருங்கள், அச்சப்பட வேண்டாம்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜுனியர் என்டிஆர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




