பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னட பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி படங்களில் நடித்தார்.
சம்யுக்தா பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. "என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள்" என்று உருக்மான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதோடு பெற்றோர்கள் முதியவர்கள் என்பதால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் டாக்டர்களின் ஆலோசனையின்படி வீட்டிலேயே அவர்களை தனிப்படுத்தி வைத்து கவனித்து வந்தார். பெற்றோர்கள் குணமாகி வரும் நிலையில் சம்யுக்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; உங்களின் பிரார்த்தனைகளால் எனது பெற்றோர் நலம் பெற்று வருகிறார்கள். டாக்டர்கள் ஆலோசனைப்படி எனக்கு பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. நானும் அதனை பாசிட்டிவாகவே எடுத்துக் கொண்டேன்.
என் பெற்றோர்கள் குணமடைந்ததே எனக்கு புதிய உலகத்தில் பிரவேசிப்பது போல இருந்தது. நானும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வருவேன். என்று கூறியிருக்கிறார். சம்யுக்தாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டி வருகிறார்கள்.