‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கோமாளி படம் ஜெயம்ரவிக்கு வெற்றியை கொடுத்தாலும் அவரது 25வது படமான பூமி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஓடிடி தளத்திற்கு விற்று தயாரிப்பாளர் தப்பித்துக் கொண்டாலும் விமர்சன ரீதியாக படம் உரிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் அவர் இயக்குனர் அஹமத் இயக்கும் ஜனகனமன படத்தில் நடிப்பதாக இருந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த படத்தின் கதை களம் நான்கைந்து வெளிநாடுகளில் நடப்பது போன்று உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக இன்னும் ஒரு வருடத்திற்காவது படப்படிப்புக்கு திட்டமிடப்படடிருக்கும் நாடுகளில் அனுமதி கிடைப்பது சிரமம் என்பதால் அஹமத் இயக்கத்திலேயே இன்னொரு கதையில், அதாவது தமிழ்நாட்டிலேயே படப்பிடிப்பு நடத்துகிற மாதிரியான கதை களம் கொண்ட படத்தில் நடிக்க ஜெயம் ரவி திட்டமிட்டிருக்கிறார்.
மீடியம் பட்ஜெட்டில் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒருவேளை தியேட்டர்கள் திறக்கப்படாவிட்டாலும் ஓடிடியில் வெளியிடும் வகையில் இந்த படம் தயாராக இருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரையில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரும்.
இதற்கிடையில் ஜெயம்ரவி நடித்து வரும் பொன்னியின் செல்வன் படமும் முடங்கி கிடப்பது குறிப்பிடத்தக்கது. அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் ஆகியோரிடம் கதை கேட்டு ஓகே சொல்லி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.