ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வாலின் திருமணம் முடிந்த மறுநாள், நடிகை அனுஷ்கா, காஜலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “இந்த பூமியில் அதிகபட்ச மகிழ்ச்சி என்பது திருமணத்தின் மகிழ்ச்சிதான். இரண்டு மனங்கள் ஒரே எண்ணங்களுடன், இரண்டு இதயங்கள் ஒரே அசைவுடன்... காஜல், கவுதம் இருவருக்கும் மகிழ்ச்சியான திருமண நல்வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த திருமண வாழ்த்திற்கு சுமார் ஆறு மாத காலம் கழித்து 'ஹார்ட்டின்' மட்டும் பதிவிட்டு பதிலளித்துள்ளார் காஜல். “குழந்தை பெற்ற பிறகு எதற்குப் பதிலளிக்க வேண்டும்,” என ஒரு ரசிகர் அதற்கு கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.
அனுஷ்காவின் டுவீட்டை இப்போது தான் காஜல் அகர்வால் பார்த்துள்ளாரா அல்லது பதிலளிக்க மறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், எந்த கமெண்ட்டுகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. காஜலின் பதிலுக்கும் அனுஷ்கா வேறு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.