எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வாலின் திருமணம் முடிந்த மறுநாள், நடிகை அனுஷ்கா, காஜலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “இந்த பூமியில் அதிகபட்ச மகிழ்ச்சி என்பது திருமணத்தின் மகிழ்ச்சிதான். இரண்டு மனங்கள் ஒரே எண்ணங்களுடன், இரண்டு இதயங்கள் ஒரே அசைவுடன்... காஜல், கவுதம் இருவருக்கும் மகிழ்ச்சியான திருமண நல்வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த திருமண வாழ்த்திற்கு சுமார் ஆறு மாத காலம் கழித்து 'ஹார்ட்டின்' மட்டும் பதிவிட்டு பதிலளித்துள்ளார் காஜல். “குழந்தை பெற்ற பிறகு எதற்குப் பதிலளிக்க வேண்டும்,” என ஒரு ரசிகர் அதற்கு கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.
அனுஷ்காவின் டுவீட்டை இப்போது தான் காஜல் அகர்வால் பார்த்துள்ளாரா அல்லது பதிலளிக்க மறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், எந்த கமெண்ட்டுகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. காஜலின் பதிலுக்கும் அனுஷ்கா வேறு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.