எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா ஊரடங்கின் இரண்டாம் அலை விஸ்வரூபமெடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்பதே இல்லாமல் இருக்கிறது. கடந்த வருடம் கொரோனா தாக்கத்தின் போது ஓடிடி தளங்கள் அவர்களுக்கு அதிகம் அறிமுகமாகின. பார்க்காத படங்களையும் கடந்த வருட ஊரடங்கின் போது பார்த்துத் தள்ளிவிட்டார்கள்.
ஆனால், இந்த வருடத்திய ஊரடங்கில் அவர்களால் புதிய படங்களைப் பார்க்க முடியவில்லை. வேறு மொழிகளில் வந்து சில படங்களை மட்டும் ஓடிடி தளங்களில் தீவிர சினிமா ரசிகர்கள் சிலர் பார்த்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களை இந்த வருடம் ஓடிடி தளங்கள் இன்னும் கண்டுகொள்ளவே இல்லை.
இந்த இரண்டாவது அலையின் தாக்கம் திடீரென வந்ததால் அவர்களால் சுதாரித்துக் கொள்ளவும் வாய்ப்பில்லை. இப்போதுதான் பல நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். அவை முடிந்து ஒப்பந்தம் போட்டு, அதன்பின்தான் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக வேண்டும்.
எப்படியும் ஜுன் மாதத்தில் சில புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக ஜுன் மாதம் வரையில் தான் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அப்படியே இருந்தாலும் தியேட்டர்களைத் திறக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் புதிய படங்களை வெளியிட்டால்தான் ஓடிடி தளங்களும் தாக்குப் பிடிக்க முடியும் என்பது உண்மை.