என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' |
கொரோனா ஊரடங்கின் இரண்டாம் அலை விஸ்வரூபமெடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்பதே இல்லாமல் இருக்கிறது. கடந்த வருடம் கொரோனா தாக்கத்தின் போது ஓடிடி தளங்கள் அவர்களுக்கு அதிகம் அறிமுகமாகின. பார்க்காத படங்களையும் கடந்த வருட ஊரடங்கின் போது பார்த்துத் தள்ளிவிட்டார்கள்.
ஆனால், இந்த வருடத்திய ஊரடங்கில் அவர்களால் புதிய படங்களைப் பார்க்க முடியவில்லை. வேறு மொழிகளில் வந்து சில படங்களை மட்டும் ஓடிடி தளங்களில் தீவிர சினிமா ரசிகர்கள் சிலர் பார்த்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களை இந்த வருடம் ஓடிடி தளங்கள் இன்னும் கண்டுகொள்ளவே இல்லை.
இந்த இரண்டாவது அலையின் தாக்கம் திடீரென வந்ததால் அவர்களால் சுதாரித்துக் கொள்ளவும் வாய்ப்பில்லை. இப்போதுதான் பல நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். அவை முடிந்து ஒப்பந்தம் போட்டு, அதன்பின்தான் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக வேண்டும்.
எப்படியும் ஜுன் மாதத்தில் சில புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக ஜுன் மாதம் வரையில் தான் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அப்படியே இருந்தாலும் தியேட்டர்களைத் திறக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் புதிய படங்களை வெளியிட்டால்தான் ஓடிடி தளங்களும் தாக்குப் பிடிக்க முடியும் என்பது உண்மை.