ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம் பிள்ளை. 1712ம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் நீலகண்டபிள்ளை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னரான ராஜமார்த்தாண்ட வர்மனிடம் படைத் தளபதியாக இருந்தவர். அதே படையில் மற்றொரு படைத் தளபதியாக இருந்து டி லெனாய் என்ற ஆங்கிலேயருடன் நட்பு ஏற்பட்டு அவரிடமிருந்து கிறிஸ்தவம் பற்றியும், இயேசு பற்றியும் அறிந்து அதன்பால் ஈர்ப்பு ஏற்பட்டு கிறிஸ்தவராக மாறினார். இதனால் சமஸ்தானம் அவரை படையில் இருந்து நீக்கி கிருஸ்தவத்தை விட்டு விலகுமாறு கொடுமைப்படுத்தியது. அதற்கு அஞ்சாமல் வாழ்ந்த தேவசகாயம் பிள்ளையை சுட்டுக் கொன்றது. கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதி மக்கள் அவரை தெய்வமாக போற்றி வருகிறார்கள். தற்போது அவருக்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டம் அளிக்க இருக்கிறார். புனிதர் பட்டம் பெறும் முதல் இந்தியர், முதல் தமிழர் அவர். இப்போது அவரது வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார்கள். ரெயின்போ மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் புவனேஸ்வரி என்பவர் தயாரிக்கிறார். மதுமாறன் என்ற புதுமுகம் தேவசாகயமாக நடிக்கிறார். கே.பி.மனோகரன் இயக்குகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவசகாயம் பிள்ளை வாழ்ந்த பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடக்கிறது. படத்திற்கு "அருளாளர்" என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
நல்ல காரியம் பண்றீங்க.