'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல்அகர்வால். திருமணத்திற்கு பிறகு தனது படப்பிடிப்பு தளங்களுக்கு கணவரை அழைத்து வந்து தனது சினிமா நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு,திருமணத்திற்கு பிறகும் தனது கணவர் நடிப்புக்கு தடை போடாததால் வழக்கம்போல் சினிமாவில் நடித்து வருகிறார்.
அந்தவகையில், தமிழில் இந்தியன்-2, ஹாய் சினாமிகா போன்ற படங்களில் நடிப்பவர், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ளயிருந்த காஜல்அகர்வால், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதால் மும்பையில் உள்ள தனது வீட்டில் கணவருடன் நேரத்தை செலவிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு, கணவரை கட்டித்தழுவிக்கொண்டு எடுத்துக்கொண்ட ஒரு செல்பியை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் காஜல். அதோடு தனது குடும்ப உறுப்பினர்கள் அன்பு, ஆதரவு, கவனிப்பு என அனைத்தையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.