சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சினிமாவில் முன்னேற வேண்டுமென்றால் நடிகர்களின் நடிகையாக இருப்பதைவிட இயக்குனர்களின் நடிகையாக இருப்பதுதான் பெஸ்ட் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் அமலாபால். ஆரம்பத்தில் இந்த சீக்ரெட் சமாச்சாரம் தெரியாமல், முன்னணி ஹீரோக்களை வசப்படுத்தி வைத்துக்கொண்டால் வரிசையாக படங்கள் புக்காகும் என்று எண்ணியிருந்தவருக்கு சீயான் உள்ளிட்ட சில நடிகர்கள் கற்பித்த பாடம் இப்போது பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
அதனால் இப்போதெல்லாம் யாராவது நடிகர்கள் தனது அருகில் வந்து அமர்ந்து கொண்டு உனக்கு நான் படம் சொல்கிறேன். உன்னை நம்பர்ஒன் நடிகையாக்கி விடுகிறேன் என்று அமலாபாலிடம் காதுகடித்தால், அவர்களை கடித்து குதறி விடுவது போன்று பார்க்கிறார். இதுமாதிரி எங்கிட்ட சொல்லி மோசம் செஞ்ச நடிகருங்க நிறைய பேர பாத்துட்டேன். சினிமாவில்தான் நீங்களெல்லாம் ஹீரோ. ஆனா திரைக்கு பின்னாடி வில்லனுங்க என்று சொல்லி விரட்டியடிக்கிறார். அதேசமயம், இயக்குனர்கள் தன்னருகே வந்தால், ஆசை ஆசையாக பேசுகிறார் அம்மணி. அவரது வாய் மணக்கும் பேச்சில் இயக்குனர்கள் சொக்கிப்போய் அமர்ந்திருப்பதை, தூரத்தில் நின்று பார்க்கும் ஹீரோக்கள் செம கடுப்பாகி நிற்கிறார்கள்.